ஐபிஎல் 2020 போட்டி கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டது. பின் கொரோன வைரஸ் சற்று குறைந்த நிலையில் பிசிசிஐ ஐபிஎல் நடத்த பல விதிமுறைகளை கூறியுள்ளது. அதில் ஐபிஎல் வீரர்கள் அவர்களது குடுமபத்தினருடன் போட்டிக்கு சென்றால் அவர்களுடன் பயிற்சி மேற்கொள்ளும் போதும் மற்றும் போட்டி நடக்கும்போதும் குடும்பத்தாருடன் நெருக்கமாக இருக்க முடியாது என்று பிசிசிஐ தெரிவித்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
குடும்பத்தை விட்டு செல்லும் சிஎஸ்கே அணி
2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஆரம்பம் ஆகி நவம்பர் மாதம் 10ம் தேதி வரையில் நடத்த திட்டமிட்டுள்ளது பிசிசிஐ. ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் அணிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல்லின் சிஎஸ்கே அணிய சேர்ந்த சில வெளிநாட்டு வீரர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வீரக்கல் தங்குவதற்காக யூஏஇவில் உள்ள பர்ஜ் கலிஃபா உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் மூன்று தளங்களை வாடகைக்கு எடுக்கப்பட்டு வீரர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர். ஐபிஎல் போட்டி குறித்து பிசிசிஐ சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி அணி வீரர்கள் அவர்களது குடும்பத்தினருடன் அழைத்து வந்தால் பயிற்சிகள் போதும் மற்றும் போட்டிகளின் போதும் குடும்பத்தாருடன் நெருக்கமாக இருக்க அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்தினர் அழைத்து செல்லாமல் யூஏஇக்கு பயணம் செய்ய போவதாக கூறப்பட்டுள்ளது.