தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
வறண்ட வானிலையே நிலவும்:
வளிமண்டல சுழற்சி மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இப்படியான நிலையில், இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் அதாவது தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பதிவு:
தமிழகத்தில் கடத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பழவிடுதி என்ற பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது, பாபநாசம், வேப்பந்தட்டை, சோலையூர், வைகை அணை பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது, திருப்பத்தூர், ஊத்துக்கோட்டை, கும்முடிப்பூண்டி பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக தாமரைப்பாக்கம், மணல்மேடு, தேக்கடி மற்றும் சீர்காழி பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.