தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சிறப்பான பணிகளை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பதவியையும், கூடுதலாக பாஜக அரசு வழங்கியது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளுநர் தமிழிசை, வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்தது.
கங்குவா படத்தின் டீசர் எப்போது வெளியீடு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!
இதற்கேற்றவாறு தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு, தமிழிசை சவுந்தரராஜன் கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து மக்களவை தேர்தலில் புதுவை தொகுதி வேட்பாளராக களமிறக்க படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.