இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் வெவ்வேறு பெயர்களில் நடைபெறும் ஒரு முக்கிய தொடர் ஆகும். இந்நிலையில் இத்தொடரின் 17வது சீசன் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) முதல் பிரமாண்டமாக தொடங்க உள்ளதை நாம் அறிவோம். இதில், குறிப்பாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற CSK அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
இதில், வரும் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் RCB அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று (மார்ச் 18) காலை தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதையடுத்து, ஆன்லைனில் PAYTM மற்றும் www.insider.in தொடங்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டதாக, காட்டப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.இதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் டிவி ல பாத்துட்டு கை தட்டிட்டு போங்க டா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.