இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் மிக மோசமான பொருளாதாரம் நிலவி வருவதால், பெரும்பாலான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டு மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையின் நோன்பு தொடங்கி நடைபெற்று வருவதால், LPG சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நோன்பு மாதத்தில் தடையில்லா சிலிண்டர் விநியோகிக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்த அந்நாட்டு அரசு, தற்போது கேஸ் எரிவாயு விலையை இரட்டிப்பாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். வாக்குறுதிக்கு மாறாக வரலாறு காணாத அளவில் விலை உயர்த்தி உள்ளதாக, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
IPL 2024: விற்றுத் தீர்ந்த CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்டுகள்.. சோகத்தில் ரசிகர்கள்!!