தமிழ் நாட்டில் இனி வாரந்தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.
தற்போது உள்ள கொரோனா சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் தங்களின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்து கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.
ஆனால் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழக அரசு நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. இதனால் நேற்று மட்டும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இனி ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்