தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? மாநில அரசுக்கு எச்சரிக்கை!!!

0
தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? மாநில அரசுக்கு எச்சரிக்கை!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அகவிலைப்படி உயர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் என தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், நேற்று (மார்ச் 18) சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை நகலுடன் கூடிய மனுவை கொடுத்துள்ளனர்.

அதில் “போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சுமார் 92,000 ஓய்வூதியதாரர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எனவே ஆட்சியர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: புதிய தோற்றத்தில் களமிறங்க தயாராகும் விராட் கோலி…, கடந்த ஒரு வருட அதிரடியை தொடருவாரா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here