இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் நடப்பு 2024 ஆம் ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே, கடுமையான வெப்ப அலை வீசத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஐ.நா. தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!
அதன்படி கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் ஏற்படும் வெப்ப அலை தாக்கத்தால் பெரியவர்களை விட 24 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். அந்த குழந்தைகளுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள், சுவாச பாதை நோய்கள், இருதய நோய். ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.