தமிழக அரசானது மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000-யை வழங்கி வருகிறது. இத்திட்டம் தேர்தல் நேரத்தில் செயல்படாது என தகவல்கள் உலா வந்ததை நாம் அறிவோம்.
தற்போது இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமை தொகை ரூபாய். 1000 அளிக்க எந்தவித தடையும் இல்லை, செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்.