தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 12) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். அதேபோல் இன்றும் (ஏப்ரல் 12) நாளையும் (ஏப்ரல் 13) குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி., இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு? அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here