நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்தாலும் அந்த சலுகைகள் பெரும்பாலான இடங்களில் முறையாக செல்வதில்லை என பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உத்திரபிரதேச மாநில ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ பொருளுக்கு 4 கிலோ மட்டுமே கிடைப்பதாக புகார் தெரிவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு புதிய வசதியை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு ரூ. 1 லட்சம் திருமண உதவித் தொகை.. வாக்குறுதி அளித்த முன்னாள் முதல்வர்!!
அதாவது இ-பிஓஎஸ் இயந்திரங்கள் ஃபோர்க்குடன் மின் எடை அளவு (EWS) இணைக்கப்பட உள்ளது. அதன்படி பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பின், அவர்களுக்கான அளவு தானாகவே வந்துவிடும். இதில் எடை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ரேஷன் பயனாளிகள் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.