நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முக்கிய வாக்குறுதியை தந்துள்ளார். அதாவது, தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என வாக்குறுதியை தந்துள்ளார். மேலும் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
Enewz Tamil டெலிக்ராம்
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!