தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் பணிகளில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!
அதன்படி கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பயிற்சியில் ஆசிரியர்கள் சிலர் முழுவதும் கலந்து கொள்ளாததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் பயிற்சி வகுப்பில் முழுமையாக பங்கேற்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.