வளர்ச்சி, நிலைத்தன்மை அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. இதனை ‘டுவிட்டரில்’ குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களை இணைந்து செயல்பட வலியுறுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கர்நாடக தலைநகர் பெங்களூரை சேர்ந்த அமைப்பு ஒன்று, சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்களை வெளியிட்டுள்ளது. இதில், மிகப்பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது. 3, 4வது இடங்கள் முறையே ஆந்திரா, கர்நாடகா பிடித்துள்ளன.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. இது நமது உறுதியான செயல்பாடு, மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்திருப்பதை காட்டுகிறது. நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால், தொடர்ந்து தமிழகத்தை சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக கொண்டு செல்லலாம்,’ என தெரிவித்துள்ளார்.