தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், அடுத்த 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக கள்ளக்குறிச்சியில் 32 பள்ளிகள் மூட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் “ஏழைகளின் கல்விக் கோயிலான அரசு பள்ளிகளை மூடக்கூடாது.” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “குறைவான மாணவர்கள் எனும் காரணத்தால் மூட நினைத்தால், தமிழகத்தில் உள்ள 90% பள்ளிகளை மூட வேண்டிய நிலை உருவாகும். எனவே பள்ளிகளை தமிழக அரசின் இந்த முடிவை, உடனடியாக கைவிட வேண்டும்.” எனவும் கூறியுள்ளார்.