தமிழகத்தில் நடப்பு வாரம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் சில தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஊரடங்கு அமலில் இருந்தும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த வகையில் நடப்பு வாரமான மே 24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறி, பழங்கள், மளிகை போன்ற கடைகளும் செயல்படாது என்றும் ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சேவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – கோவாக்சின் நிறுவனம் அறிக்கை!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன், அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முழு ஊரடங்கை கடைப்பிடித்தும், தடுப்பூசியை முறையாக செலுத்தியும் கொரோனா சங்கிலியை உடைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.