தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 – முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!!

0

தமிழகத்தில் உள்ள மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5,000 மீன்பிடி தடைகால நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது இதனால் மீனவ குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீனவர்களுக்கு நிவாரணம்:

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிவாரணங்களை அறிவித்து வருகிறார். தற்போது அந்த வகையில் மீனவ குடும்பங்களுக்கான நிவாரணத்தை ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஆண்டு தோறும் தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையும் மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையிலும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தற்போது இந்த ஆண்டும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மீனவ குடும்பங்கள் அனைத்தும் தங்களது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவர். இதனால் அவர்களின் வருமானமும் கடுமையாக பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 2008ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கி வருகிறது. தற்போது அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிவாரணத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘தயவுசெஞ்சி எல்லாரும் வீட்டிலே இருங்க’ – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

அதன்படி 1.72 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், ராமநாதபுரம்,விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய பகுதிகள் சேர்ந்த 1,46,598 மீனவ குடும்பங்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 25,402 மீனவ குடும்பங்கள் பயனடையவுள்ளனர். இந்த நிவாரண தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here