தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான முரளியின் மூத்த மகன் தான் அதர்வா. வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அதர்வா பெண்களின் ஸ்மார்ட் ஹீரோவாகவே வலம் வருகிறார். கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வரும் அதர்வா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதர்வா
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அதர்வா. மேலும் பிரபல நடிகரான முரளியின் மூத்த மகன் என்பதால் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்தார். பானா காத்தாடியில் பள்ளி சிறுவனாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவரின் நடிப்பு முதல் படத்தை போலவே இருக்காது.
அந்த அளவிற்கு அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் ஒரு காட்சியில் முரளியும் நடித்திருப்பார். இது தான் முரளியின் கடைசி படமும் கூட. நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே பெண்களின் கனவு நாயகனாக ஆனார் அதர்வா. அந்த அளவிற்கு இவருக்கு பெண் ரசிகர்கள் உள்ளனர்.
முரளியின் இளைய மகனான அதர்வாவின் தம்பி ஆகாஷ் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மகள் சினேகாவை திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது.
இதனால் ரசிகர்கள் பலரும் தம்பிக்கே திருமணம் ஆகிவிட்டது. உங்களுக்கு எப்போ?? என்று கேட்டு வந்தனர். சில வருடங்களாக கோவாவில் ஒரு பெண்ணை காதலித்து வந்த அதர்வா தற்போது வீட்டில் திருமணத்திற்கு சம்மதமும் வாங்கி விட்டாராம். விரைவில் திருமணமும் நடக்க இருக்கிறதாம்.
மேலும் ஆகாஷ் அவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததால் அதர்வாவின் திருமணமும் ஆகாஷ் அவர்களின் வரவேற்பும் ஒரே மேடையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறதாம். மேலும் அதர்வா திருமணம் ஜனவரியில் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.