T20 போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்காதது இதுதான் காரணம் என பிசிசிஐ திட்டத்தை உடைத்தெறிந்து உள்ளார் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.
T20 World Cup
கடந்த ஆண்டு T20 உலக கோப்பையை இந்திய அணி நழுவ விட்டதில் இருந்து மூன்று வடிவ போட்டிகளிலும் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி கேப்டன் ரோஹித் சர்மாவின் பணிச்சுமையை குறைக்க T20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட T20 அணிகளை பிசிசிஐ தயார் செய்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதற்கேற்றாற்போல் இந்த அணிகளும் தொடர்ந்து இலங்கை, நியூசிலாந்து T20 தொடர்களின் கோப்பைகளை வென்று வருகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள T20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். அதாவது “T20 போட்டிகளில் சீனியர் வீரர்களை ஓரம் கட்டிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கல்யாணம் பண்ணோம்.., உலக பேமஸ்.., அதுகூட கொஞ்சம் சர்ச்சை.., ஓபன் டாக் கொடுத்த மஹாலக்ஷ்மி-ரவீந்தர்!!
அதனால் என்னுடைய கணிப்பு படி அடுத்த T20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவுக்கு அணியில் இடமளிக்க வாய்ப்பே இல்லை. அதேசமயம் விராட் கோலி களமிறக்கப்படுவார் என நான் உறுதியாக கூறுகிறேன். மேலும் தற்போது தயாராகி வரும் இளம் வீரர்களுக்கு சீனியர் வீரர்களின் வழிகாட்டுதல்களும் தேவைப்படாது.” என ஓபன் டாக்காக கூறியுள்ளார்.