டி20 உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில் அதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் மிகப்பெரிய திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய இந்தியா!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கடுமையான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனை தொடர்ந்து கடைசியாக ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்திய வீரர்கள் அனைவரும் T20 உலகக் கோப்பைக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அனைத்து அணிகளும் தங்களது 16 பேர் கொண்ட அணி வீரர்களை அறிவித்து வரும் நிலையில் இந்தியா இன்னும் டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிடவில்லை. இந்நிலையில் இந்திய அணி சில முக்கியமான வீரர்களை கொண்டு டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சி பெறும் வகையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் மோத உள்ளனர். அதன்படி நியூசிலாந்து அணியுடன் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இந்திய அணி போட்டியிட உள்ளது.
இந்த போட்டிகளின் மூலம் இந்திய அணி T20 உலக கோப்பைக்கு பலமான அணியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆசிய கோப்பையை தவறவிட்டுள்ள இந்திய அணி T20 உலக கோப்பையில் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டன் ஆக இருந்து அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது.