ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நடிக்கும் நடிகை அர்ச்சனா, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்துள்ளார்.
அசர வைத்த அர்ச்சனா:
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற நெடுந்தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து, மீனாட்சி பொண்ணுங்க என்ற புதிய தொடர் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கணவரால் கைவிடப்பட்ட தனி ஒரு பெண் மூன்று பெண் குழந்தைகளையும், எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பதை இந்த சீரியலின் கதை.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா நடித்து வருகிறார். நடுத்தர வர்க்கத்தின், ஒற்றைப் பெண்மணியாய் இந்த கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா வாழ்ந்து காட்டி உள்ளார்.
இவரது வசனங்களும் நடிப்பும், பெண்களின் மொத்த உணர்வையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளி திரையில் ஜொலித்து வந்த நடிகை அர்ச்சனா, இந்த சீரியலில் தனது நடிப்பால் அனைவரது மனதையும் பிழிந்து வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.