கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா தற்போது கொரோனாவால் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். மேலும் அவர் இப்பொது தனது படப்பிடிப்பில் கவனம் செலுத்தவும் துவங்கியுள்ளார்.
சூர்யா:
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் தான் சூர்யா. இவரது குடும்பமே திரைக்குடும்பம் என்று சொல்லலாம். ஏனெனில் இவரது தந்தை சிவகுமார் ஆரம்ப காலங்களில் சினிமா துறையில் தனது நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்து வந்தார். தற்போது இவரை தொடர்ந்து அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து சூர்யாவின் மனைவி ஜோதிகா இவரும் சினிமா உலகில் தனக்கென தனி பாணியை வைத்து கொண்டு அதில் மிக சிறந்தவராக விளங்குகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுபோல் சினிமாவில் மிக பிரபலமாக, குடும்பத்தோடு திகழ்ந்து வந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில தினங்களுக்கு ஓர் சம்பவம் அரங்கேறியது. சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் திரையுலகமே அதிர்ந்து போனது. இதனை தொடர்ந்து இவரது தந்தை சிவகுமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியும் இதனுடன் பரவியது. இதனால் சூர்யாவின் குடும்பமே தங்களை தனிமைபடுத்திக்கொண்டது.
இந்நிலையில் தற்போது சூர்யா முழுவதுமாக கொரோனாவால் இருந்து விடுபட்டுள்ளார் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இன்று முதல் தனது ‘சூர்யா 40’ என்ற திரைப்பட படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார். இவரை போல் தற்போது ஜோதிகாவும் தனது புது படத்தில் கமிட் ஆவது குறித்து பிசியாக இருந்து வருகிறார்.
#EppadiIrunthaNaanga
“எப்படி இருந்த நாங்க” #Sulthan3rdSingle from Today 5.30pm.Sung by: Anthony Daasan
Lyrics: Viveka
A Vivek – Mervin Musical #Sulthan #சுல்தான் #Sulthan3rdSingleFromToday @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k @iamviveksiva @MervinJSolomon pic.twitter.com/Yr72zszwUF— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 15, 2021
கிளாமரில் மிரட்டும் பிக்பாஸ் கேபிரியல்லா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!
மேலும் இவரது தம்பி கார்த்தி தற்போது லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் படம் தான் ‘சுல்தான்’. இந்த படத்தின் இரு பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் ஆனது. தற்போது சுல்தான் படத்தின் மற்றொரு பாடலான ‘எப்படி இருந்த நாங்க’ என்ற பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. இந்த பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடல் சூர்யாவின் குடும்பம் மீண்டும் திரைத்துறைக்குள் வரும் கம்பேக்கை தெரிவிப்பது போல் உள்ளதால் தற்போது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.