இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா IPL கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
சுரேஷ் ரெய்னா ஓய்வு!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். இவர், இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இந்நிலையில் ரெய்னா கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவருடன் இணைந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி-யும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்த செய்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த இருவரின் ஓய்வு குறித்து பேசிய ரெய்னா தோனியின் ஜெர்சி எண் 7, என்னுடைய ஜெர்சி எண் 3, சேர்த்தால் 73, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை நினைவுபடுத்தும் விதமாக நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம் என கூறியுள்ளார். இந்த சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா மொத்தம் 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் குவித்துள்ளார். ஆனாலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவர் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
முக்கியமாக சென்னை அணி ரெய்னாவை புறக்கணித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அந்த அணிகளின் உரிமையாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.