தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
சுதா கொங்கரா
‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘சூரரைப் போற்று’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த இரண்டு திரைப்படங்களும் மொழியை கடந்து பலதரப்பு மக்களிடையே பேசப்பட்டது. குறிப்பாக, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ஹிந்தி மொழியில் ரீமேக் செய்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த வக்கீல் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வரும் சுதா கொங்கரா காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அரசு பேருந்து, ஆம்னி வேன் நேருக்கு நேராக மோதி விபத்து., சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி!!!
அதாவது, படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சுதா கொங்கராவுக்கு கையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட அவர், நன்றாக வலிக்கிறது. ஒரு மாத பிரேக் கிடைத்துள்ளது. இந்த மாதிரியான இடைவேளையை விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அவர் விரைவாக குணமடைய வேண்டி பதிவிட்டு வருகின்றனர்.