அரசு பேருந்து, ஆம்னி வேன் நேருக்கு நேராக மோதி விபத்து., சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி!!!

0

நாட்டில் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வெள்ளமடை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மற்றும் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து கும்பகோணம் மார்க்கமாக அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கமாக 6 நபர்கள் வெள்ளகோவிலில் பெண் பார்த்துவிட்டு திருப்பூருக்கு மாருதி ஆம்னி வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். இப்படியாக இரு வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி எதிர் எதிராக மோதி விபத்துக்குள்ளானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் ஆம்னி வேனில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விவரம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here