கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ 2 ஆம் பாகம் குறித்த அப்டேட்டை இயக்குனர் ரிஷப் ரெட்டி பகிர்ந்துள்ளார்.
காந்தாரா அப்டேட்
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகி உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த கன்னட திரைப்படம் ‘காந்தாரா’. பழங்காலத்து கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, எதிர்பார்த்ததை விட வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், ‘காந்தாரா’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தயாரிக்கப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் காணப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
‘சூரரைப் போற்று’ இயக்குனருக்கு நடந்த சோகம்…,படப்பிடிப்பில் காயம்…,
இது குறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் ரிஷப் ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது, ‘காந்தாரா’ திரைப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றி விழா நிகழ்வில் பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி, ‘கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது காந்தாரா திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தான். ஏனென்றால், இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் நிகழ்வாக தான் அடுத்த படத்தின் கதைக்களம் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.