கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ள சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு சிபிஎஸ்சி நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சிபிஎஸ்சி தேர்வுகள்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாநில பாடத்திட்டங்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் சிபிஎஸ்சி தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கொரோனாவிற்கான புது மருந்து – இங்கிலாந்து விஞ்ஞானிகள் அசத்தல்..!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்து அறிக்கை அளிக்குமாறு சிபிஎஸ்சி க்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர். தேர்வுகளை ரத்து செய்து நடந்து முடிந்த தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது குறித்தும் முடிவு செய்யுமாறு கூறப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு பதிலாக ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.