சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!அடுத்த பிளான் என்னவா இருக்கும்!!!

0

கடந்த மாதம் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். சிகிக்சைக்கு பிறகு இன்று அவரின் மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். இதனிடையே இவரின் இந்த வருகை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் அடுத்த பிளான் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் 19ஆம் தேதி  சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா  சென்று இருந்தார். அங்கு தான் ஓய்வாக இருக்கும் நேரங்களில் மகளுடன் வெளியே செல்வது, அமெரிக்கா வாழ் ரசிகர்களை சந்திப்பது என தனது நேரத்தைக் கழித்தார். மேலும்  அவர் ரசிகர்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி படு வைரலாகின. மேலும் அந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை உற்சாகபடுத்தியது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரிசோதனை முடிவடைந்து இன்று காலை சென்னை திரும்பி உள்ளார். சென்னை திரும்பிய அவருக்கு அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்து உள்ளனர். மேலும் ரஜினி செய்தியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை நல்லபடி முடிந்தது என்று  கூறியுள்ளார். மேலும் அவரின் ரசிகர்களிடையே  ரஜினியின் அடுத்த பிளான் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கிளம்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here