சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த உயரிய கெளரவம்.. விருதை பெற்று நன்றி கூறிய மகள் ஐஸ்வர்யா!

0
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த உயரிய கெளரவம்.. விருதை பெற்று நன்றி கூறிய மகள் ஐஸ்வர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் விதமாக நியூஸ் 18 குழுமம் சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதனை அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

அம்ரித் ரத்னா விருது:

தமிழ் சினிமாவில் எந்த படம் எடுத்தாலும் வசூல் சாதனை படைத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பு துறைக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த 40 வருடங்களில் பாட்ஷா, படையப்பா, முத்து போன்ற பல படங்களும் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருது முதல் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் விதமாக நியூஸ் 18 குழுமம் சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதனை அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற இவ்விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பிசியாக இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விருதுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதாவது என்னுடைய அப்பாவை கௌரவித்து அம்ரித் ரத்னா விருது வழங்கியதற்கு மிகவும் நன்றி என கூறி நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த விருதுக்காக ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here