கிணற்றில் கட்டி விட்டு தொங்கவிடப்பட்ட சன் டிவி சீரியல் நாயகன், நாயகி.., வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0

போற போக்க பார்த்தா படத்துக்கும் சீரியலுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடும் போல. முன்னாடி எல்லாம் சீரியல் பார்க்கும் போது அப்பட்டமா நாடகம் அப்படின்னு தெரியும். ஆனா இப்ப வரக்கூடிய எல்லா சீரியலும் படத்தையே மிஞ்சிது. அதுவும் சீரியல்ல பாம்பு, பேய் இதெல்லாம் வெச்சி எடுத்தா சொல்லவே வேண்டாம் அடி தூள் ஹிட் தான்.

இந்த வரிசையில மொத மொத ஹிட் கொடுத்த சீரியல் அப்படின்னா அது நாகினி தொடர் தான். ஹிந்தியிலிருந்து டப்பிங் செஞ்சு வந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்ச தொடராதான் இருந்துச்சு. எப்போவும் டப்பிங் சீரியல் அப்படின்னா மக்களுக்கு அதுல பெருசா ஈடுபாடு ஏதும் இருக்காது. ஆனா இந்த நாகினி சீரியல் அப்படி கிடையாது. எதிர்பார்த்ததை விட நல்ல ஹிட்டை கொடுத்துச்சுன்னே சொல்லலாம்.

மேலும், அதே சன் டிவியில் ஒளிபரப்பாகிய நந்தினி சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனால் இதையே ஒரு ட்ரிக்கா வச்சு சீரியல் இயக்குனர்களும் இது போன்ற சீரியல்களை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் இப்போ சன் டிவி தொலைக்காட்சியில் ‘நாகமணி’ அப்படிங்கிற பெயரில் ஒரு புதிய சீரியல் ஒன்று வரப்போகுது. அதுக்கான ஷூட்டிங் காட்சிகளும் இணையத்தில் தொடர்ந்து வைரலாக பகிரப்பட்டு வரதுனால ரசிகர்களுக்கும் இந்த சீரியல் குறித்ததான ஹைப் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு. அதாவது கயிறை கட்டி கிணற்றில் ஹீரோ மற்றும் ஹீரோயின் தொங்கவிடுவது போல காட்சிகள் அனைவரையும் ஷாக்காக செய்துள்ளது.

அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here