தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக உருவெடுத்த சமந்தா, தற்போது தென்னிந்தியா தாண்டி பாலிவுட்டிலும் அதிக படங்களில் கமிட் ஆகி வருகிறார். முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட கூடாது என்ற பிம்பத்தை உடைத்தவர் சமந்தா தான். இவர் புஷ்பா படத்தில் ஆடியுள்ள ஒ சொல்றியா பாடல் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் ஹிந்தி சினிமா பிரபலங்கள் மட்டுமே பங்குபெறும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் கலக்கினார். சமீபத்தில் தான் சமந்தா தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில் மற்றொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது தெலுங்கில் பிரபல இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தில் சமந்தாவை தான் ஹீரோயினாக தேர்வு செய்தார்களாம். இயக்குனர் சமந்தாவுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சமந்தாவோ 4 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இந்த தொகை அதிகம் என்பதால் சமந்தாவை நாயகியாக்கும் முடிவில் இருந்த இயக்குனர் பின்வாங்கிவிட்டாராம். தன்னை வளர்த்து விட்ட தெலுங்கு சினிமாவிலேயே சமந்தா இவ்வாறு செய்வது தயாரிப்பாளர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.