அடுத்தடுத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பிரக்ஞானந்தா – அசத்தல் சாதனையுடன் முதல் இடம்!

0
தொடர்ந்து அசதி வரும் கிராண்ட் மாஸ்டர் - முன்னிலை பிடித்த தமிழக வீரர்!
தொடர்ந்து அசதி வரும் கிராண்ட் மாஸ்டர் - முன்னிலை பிடித்த தமிழக வீரர்!

துபாய் ஓபன் செஸ் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா விளையாடிய அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார்.

துபாய் ஓபன் செஸ் 2022:

துபாய் ஓபன் 22 வது செஸ் போட்டி மூன்று வருடங்கள் கழித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் இந்த ஆண்டு நடைபெறும் இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் 78 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. துபாய் ஓபன் செஸ் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்தில் உள்ளார். மேலும் இவர் அண்மையில் நடைபெற்ற எஃப்டி எக்ஸ் கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் அமெரிக்க வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here