தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் இன்று திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, தென்காசி, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இப்படி சமீப காலமாக கோடை மழை பொய்த்து வருவதால் கடந்த மார்ச் 1 முதல் இன்று (மே 22) காலை வரை 183.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பதிவாகும் 107 மி.மீ. விட 72 சதவீதம் கூடுதலாக உள்ளது எனவும் தகவல் வெளிவந்துள்ளது.