தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை சுகன்யா. தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இவர் கடந்த 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது வரை சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு விவாகரத்தாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்போது இருந்து இப்பொழுது வரை இரண்டாவது திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை. ஒரு வேலை நான் திருமணம் செய்து கொண்டாலும், பிறக்க போகும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா, இல்லை பாட்டி என்று அழைக்குமா? என்று யோசிப்பவள் நான் என்று கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமியில் அமிர்தா விலகுவதற்கு காரணம் இதுதானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!