தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 4ம் ஒன்று. இப்பொழுது பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசனில் புதுவரவாக பிரபல பாடகி சுசித்ரா நுழையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
சுசித்ரா
மக்களின் பல் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் பிக் பாஸ் சீசன் 4. நாம் எதிர்பார்த்ததை விட ஆரம்ப நாட்களில் இருந்தே ஹவுஸ் மேட்ஸ் பலரும் சண்டையிட ஆரம்பித்து விட்டனர். மேலும் பாலாஜி மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் போட்டியாளர்களிடம் கண்டபடி பேசி விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சக போட்டியாளர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது. ஏற்கனவே அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்தார். அவர் வந்த நாளில் இருந்தே வீட்டில் அவரின் சத்தம், தான் கேட்டுக்கொண்டுள்ளது.
இதில் அனிதா தன் பேச்சை யாரும் கேட்பதில்லை என்று நேற்றைய எபிசோடில் கதறி அழுதார். மேலும் பாலாஜி, கேபிரியலா, ஷிவானி இடையே முக்கோண காதல் கதை வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது பிரபல பாடகியான சுசித்ரா 18வது போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சூடு பிடிக்கும் பிக் பாஸில் சுசித்ரா அவர்கள் கலந்து கொண்டால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் சில வருடங்களுக்கு முன்னால் சுச்சி லீக்ஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வரும் பிக் பாஸ் எபிசோடில் பல தரமான சம்பவங்கள் நமக்கு காத்துக்கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.மேலும் இவர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் நள்ளிரவில் தன்னை யாரோ கொலை செய்ய போவதாக அலறி அடித்து ஓடியுள்ளார். மேலும் ஏதோ பித்து பிடித்தது போல அமர்ந்திருந்தாராம்.