இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அறிகுறிகள் இருந்தால்..!
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்னை, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்..!
மேலும் உடல்நலம் பாதித்துள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், இருமல், தும்மல் உள்ள மாணவர்கள், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தினமும் சோப்பு உபயோகித்து கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |