காதலர் தினத்தில்  ஜோடிகளுக்கு போலீசார்  வைத்த  சரியான ஆப்பு .., சிங்கிள்ஸ்  சாபம் சும்மா  விடுமா??

0
நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா, மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காதலர்கள் வருகை அதிகரிக்கும். இதனால் இப்போது போலீசாருக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மெரினா, எலியட்ஸ் கடற்கரை போன்ற இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த காதல் ஜோடிகளை மிரட்டும் சம்பவமும் பல இடங்களில் நிகழ்ந்து கொண்டுள்ளது. இது போன்ற யாரேனும் காதல் ஜோடிகளை மிரட்டினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள், 16 வயதுக்கு கீழ் உடைய காதல் ஜோடிகளை கண்காணித்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப பெண் போலீசார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here