தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவு பொருட்களை அகற்ற அனுமதி வழங்குமாறு கோரப்பட்ட வழக்கில் இதற்கான அனுமதியை வழங்க முடியாது என தமிழக அரசு மறுத்து விட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்!!
அனுமதி அளிக்க முடியாது :
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த 2018ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இதையடுத்து, கொரனா பரவலின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் இந்த ஆலையை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியது.
இதில், ஆக்சிஜன் உற்பத்தி முடிந்ததும் மூடப்பட்ட இந்த ஆலையில் ஏராளமான கழிவு பொருட்கள் உள்ளதால் அதை அகற்ற அனுமதி அளிக்குமாறு வேதாந்தா குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு தற்போது மறுத்து விட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்