மறைந்த இலக்கியத்தின் தந்தை கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 வது மாடியில் இருந்து குதித்த பூனை – அடுத்து என்ன நடந்தது பாருங்களே!!!
மறைந்த கி.ரா. வுக்கு சிலை அமைக்கப்படும்:
பிரபல எழுத்தாளரும் சாசித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் தனது 99வது வயதில் முதுமை காரணமாக புதுச்சேரியி ல் காலமானார். இதனை தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள்
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ” என்று கூறியுள்ளார்.மேலும் அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் அதோடு கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்றும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை, மாணவர்களும் பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்று கூறினார்.