10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை – அதிர்ச்சி தகவல்!!

0
10 th exams results
10 th exams results

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

10ம் வகுப்பு ரிசல்ட்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

public exams
public exams

பல பள்ளிகளில் 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை எனவும், அதுமட்டுமின்றி பொதுத்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக பல மாணவர்கள் ஆண்டுத் தேர்வுகள் எழுதவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பல அரசுப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அதிகளவு மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இருப்பினும் அனைவரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவே கருதப்படுவர் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சீனாவில் பரவும் புபோனிக் பிளேக் தொற்றுநோய் – ஒரு கிராமத்திற்கே சீல்!!

இந்நிலையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. அதில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு சில பாடங்கள் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here