பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!

0

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது.

20 ம் தேதி வரை கடுமையான ஊரடங்கு..!

கொரோனா வைரஸ் காரனமாக ஊரடங்கு உத்தரவை மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். மேலும் வருகிற 20-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும்.

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு எனவும் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம்..!

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்று அதிமுள்ள பகுதிகள் கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும் எனவும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here