டெல்லி, உ.பி.,இல் கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் – கொரோனாவிலும் கொடூரம்..!

0

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அழைத்துச் சென்ற டாக்டர்கள், நர்ஸுகள் மற்றும் போலீசாரை அந்தப்பகுதி பொதுமக்கள் வழிமறித்து கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டெல்லியிலும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது.

கற்களை வீசி தாக்குதல்:

உ.பி., மாநிலம் மொராதாபாத் மாவட்டம், ஹஜி நெப் மஸ்ஜித் மசூதி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உயிர் இழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வந்த சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசாரை அப்பகுதி மக்கள் கற்களை வீசி தாக்கியதில் அவர்களின் வாகனம் நொறுங்கி மற்றும் சில பணியாளர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் தாக்குதல்:

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவரை நோயாளிகள் தாக்கி உள்ளனர். அதனை தடுத்த ஆண் மருத்துவர்களையும் அவர்கள் தாக்கினர். அப்போது அங்கிருந்த அறையில் மறைந்து பாதுகாவலர்கள் உதவி உடன் அவர்கள் வெளியேறினர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here