பொதுவாக தற்போது உள்ள காலகட்டத்தில் மின் தேவை என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. இப்பொழுது உள்ள மாடர்ன் வாழ்க்கையில் ஃபேன், ஏசி, பிரிட்ஜ் என்பது அனைவருமே பயன்படுத்த கூடிய ஒன்றாக இருப்பதாக மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இப்படி இருக்க இப்பொழுது கோடை காலம் நெருங்கி வரும் வேளையில் வெப்பத்தின் அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் மின் உபயோகத்தில் அளவு உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த வருடமும் மின் உபயோகம் உச்சத்தை தொட அதிக வாய்ப்புகள் உள்ளது.
மக்களுக்கு இடையூறு எதுவும் இல்லாதப்படி அதாவது மின் தடை ஏற்படாதபடி இருக்க மின்வாரியம் பராமரிப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அதிகப்படியான கோடை வெப்பத்தால் ட்ரான்ஸ்பார்ம், மின் கம்பிகள் போன்றவை அதிக அளவு பாதிக்கப்பட்டு வருவதால் அதனை அடிக்கடி பழுது பார்க்க சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.