தற்போது நம் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு மிக கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் இவை அனைத்தும் குறைந்த பாடில்லை என்றே சொல்லலாம். அதன்படி கடந்த மார்ச் 2ஆம் தேதி புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் போது, போலீசார் அலட்சியம் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இனி இவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு.., தமிழக அரசு அரசாணை வெளியீடு!!!
கடந்த மார்ச் 5ஆம் தேதி சிறுமியின் உடலை கண்டறிந்த பிறகு கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சக கைதி கருணாஸ் சத்தம் போடவே சிறை வார்டன் உடனடியாக வந்து அவரை காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.