தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சிறப்புப் பேருந்துகள்:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 15 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் அத்தேர்வுகளில் பங்கேற்க உள்ள சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. 800 மாணவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு மையத்திற்கு வந்து செல்ல 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளில் தேர்வெழுத உள்ள மாணவருடன், ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் பேருந்தில் வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்வதற்கு முன்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் எனவும் சிறப்பு பேருந்து புறப்படும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகள் மூலம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 72 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |