பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் அவருக்கு கொரோனா சரியாகி விட்டதாகவும் கொரோனா நெகடிவ் என வந்ததாகவும் பல வதந்திகள் கிளம்பின. மருத்துவர்கள் அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரின் மகன் சரண் அவரின் உடல்நிலையை பற்றிய தகவலை அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில் 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து அவர் குணமடைந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார்.
#Spb health update 25/8/20 pic.twitter.com/pX1HXqcd2O
— S. P. Charan (@charanproducer) August 25, 2020
மேலும் அவர் எனது தந்தைக்காக பிரார்த்திக்கும் அணைத்து மக்களுக்கும் நன்றி. நான் எதற்காக தந்தையின் உடல்நிலையை குறித்து ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்றால் எனது தந்தைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அனைவர்க்கும் பொதுவான முறையில் இந்த தகவலை வெளியிடுகிறேன். இதற்கு யாரும் கோவம் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.