Monday, April 29, 2024

“எனது மகளை நன்றாக மூளைச்சலவை செய்துள்ளனர்” – சௌந்தர்யாவின் தந்தை வேதனை!!

Must Read

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தனது மகளை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நீதிமன்றம் இன்று சௌந்தரயாவை அவரது கணவருடன் செல்ல அனுமதி அளித்த நிலையில் அவரது தந்தை இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

19 வயது பெண்ணுடன் திருமணம்:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு. தலித் சமூகத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சௌந்தர்யா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. ஆனால், அவர் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யாவிற்கோ 19 வயது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பிரபு தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இவர்களது திருமணம் நடைபெறும் போது சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் எம்எல்ஏ வீட்டின் முன் தீக்குளிக்க முயற்சித்தார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதன் மூலமாக அவருக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பது தெளிவானது. அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி இன்று சௌந்தர்யா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். சௌந்தர்யாவிடம் விசாரணை நடத்திய போது அவர் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் முழு மனதுடன் பிரபுவை மணந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

வழக்கை மேல்முறையீடு செய்வேன்:

இதனை அடுத்து நீதிமன்றம் அவரை பிரபுவுடன் செல்ல அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து சௌந்தர்யாவின் தந்தை நிருபர்களிடம் பேசியதாவது “எனது மகளை நன்றாக மூளைச்சலவை செய்துள்ளனர். என் மகள் என்னுடன் முகம் கொடுத்து பேசக்கூட இல்லை. அவள் எம்எல்ஏ.,வின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது தெரிகிறது. 4 வருடங்களாக காதலிப்பதாக சொல்கின்றனர்.”

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை – இன்றைய வானிலை “ரிப்போர்ட்”!!

“அப்போது என் பெண்ணிற்கு என்ன வயது இருக்கும். என் மகளின் மனதை நன்றாக கலைத்துள்ளனர். வழக்கை மேல்முறையீடு செய்ய உள்ளேன்.” இவ்வாறாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -