உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் வருவதால் BCCI மிகுந்த பதற்றத்தில் உள்ளனர்.
இந்தியாவுக்கு பின்னடைவு
உலக கோப்பை தொடருக்கான ஆர்வம் ரசிகர்களிடையே தற்போது தான் சூடுபிடிக்க சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த ஆண்டு உலக கோப்பை பட்டத்தை வெல்லும் என அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். ஆனால் இந்திய வீரர்களின் மோசமான உடல்நிலை காரணமாக அந்த ஆசை நடக்காமல் போயிடும் போல் தெரிகிறது. ஏனென்றால் பும்ரா காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க மாட்டார் என BCCI தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பிறகு மருத்துவர்களின் ஆலோசனை படி தற்போது உலக கோப்பை தொடரில் பும்ரா விளையாட உள்ளார். இந்த பிரச்சனை முடிந்து விட்டது என நினைத்த நேரத்தில், ரோஹித், புவனேஷ், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரோஹித் சர்மா அதிக உடல் எடையுடன் இருப்பதால் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
ஒற்றை களத்தில் மோதும் இரண்டு சிங்கங்கள்.., இந்தியா VS இலங்கை.., வெற்றி வாகையை யார் சுடுவார்கள்!!
அடுத்தபடியாக புவனேஷ் குமார் இதுவரை அதிக போட்டிகளில் விளையாடிய காரணத்தால் முதுகு வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார். இவரை தொடர்ந்து ஹர்ஷல் பட்டேல் நீண்ட நாள் ஓய்வுக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் இவர் மீது அதிக பணிச்சுமையை திணித்தால் இவரும் போட்டியில் விளையாடுவது சிரமம் தான் என மருத்துவ குழுவினர் மூன்று வீரர்களையும் பரிசோதித்து விட்டு தெரிவித்துள்ளனர். இதனால் BCCI என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.