கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸுடன் மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றனர். மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர். இதனை அடுத்து அச்சமின்றி வெளியே நடமாட புதிய வழிமுறை ஒன்றை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு
மார்ச் 22 இல் போடப்பட்ட ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது. அதில் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இது மட்டுமே வழி என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அதில் இந்த ஊரடங்கில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் நமக்கு நெருக்கமானவர்கள் உட்பட வேலையாட்களுடன் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வரும்போது அல்லது வேலையாட்களுடன் உரையாடும்போது அதிக இடைவெளி விட்டே உரையாட வேண்டும். அல்லது உரையாடலை தவிர்க்க வேண்டும்.
சமூக இடைவெளி
இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “உடல் ரீதியான இடைவெளியை உறுதி செய்ய நாம் பிறருடன் மேற்கொள்ளும் உரையாடல்களை வெகுவாக குறைக்க வேண்டும்” என்றார்.
பள்ளி கட்டணம் வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது – முஸ்லீம் லீக் கோரிக்கை..!
இதனை நாம் பின்பற்றும் போது கண்டிப்பாக கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். பெரும்பாலும் தடை உத்தரவுகள் என்பதைக் காட்டிலும் மக்கள் தாங்களாகவே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளே நல்ல முடிவுகளை நமக்கு அளிக்கிறது.