ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில், தனஞ்சய டி சில்வா அதிரடியால் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை 2022:
டி20 உலக கோப்பை தொடரில், குரூப் 1ல் உள்ள ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தொடக்க முதல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனாலும், இலங்கையின் வனிது ஹசரங்கா மற்றும் லகிரு குமாரா ஆகியோரின் வேகத்தில் சீக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ்(28), உஸ்மான் கனி(27), இப்ராஹிம் சத்ரான்(22) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது. அடைய கூடிய இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர்களான, பாத்தும் நிஸ்ஸங்க சில்வா (10), குசல் மெண்டிஸ்(25) என வெளியேறினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்க இருக்கும் பும்ரா?? தேர்வு குழுவின் அதிரடி முடிவு!!
இதையடுத்து, சரித் அசலங்கா(19), பானுகா ராஜபக்ச(18) என இவர்களும் பெவிலியன் திரும்ப, தனஞ்சய டி சில்வா அதிரடியாக விளையாடி 42 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 66 ரன்கள் எடுத்து அணியின் வெற்றி வழி வகுத்தார். இதன் மூலம், இலங்கை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இலங்கை அணி 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் தற்போது 3வது இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டிக்கு பிறகு இந்த பட்டியலில் மாற்றம் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.